#ரூ.300கோடிக்கு- கொள்முதல்_முப்படைக்கு சிறப்பு அதிகாரம்!

Published by
kavitha

போர் ஆயுதங்களை அவசர தேவைக்கு 300 கோடி ரூபாய் வரை,கொள்முதல் செய்ய  ராணுவ அமைச்சகம் முப்படைகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கி  அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் நேற்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், ராணுவ கொள்முதல் குழு கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவசர தேவைகளை சமாளிக்க ரூ. 300 கோடி வரை போர் ஆயுதங்கள் மற்றும் இயந்திர தளவாடங்கள் உள்ளிட்டவற்றை வாங்க முப்படைகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இது குறித்து, ராணுவ அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில்: லடாக்கில் சீனாவின் அத்துமீறல் பிரச்னை தொடர்ந்து, எல்லையில் முப்படைகளையும் தயார் நிலையில் வைக்க  நடவடிக்கையானது எடுக்கப்பட்டு உள்ளது.

இதில் வடக்கு எல்லையில் நிலவுகின்ற பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு செய்யவும், இதர எல்லை பகுதிகளில், கண்காணிப்பை மேலும் பலப்படுத்துவது குறித்தும் ஆராய  ராணுவ கொள்முதல் குழுவின் சிறப்பு கூட்டமானது டெல்லியில் நடைபெற்றது.இதில், தரைப்படை, கடற்படை, விமானப் படை ஆகியவை  அவசர தேவைக்கான இயந்திரங்கள் மற்றும் போர் ஆயுதங்கள் ஆகியவற்றை, வாங்க, சிறப்பு அதிகாரம் அளிக்கப்பட்டது.

அதன்படி, ஒவ்வொரு படைகளும், ஒரு திட்டத்தின் கீழ் ரூ. 300 கோடி ரூபாய் வரையில் கொள்முதல் செய்யலாம்.இதுபோல, ஒவ்வொரு திட்டத்திற்கும் போர் தளவாடங்கள் உள்ளிட்டவற்றை வாங்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக தாமதமின்றி 6 மாதங்களில்  கொள்முதல் தொடர்பாக முடிவெடுத்து ஓராண்டுக்குள் ஆயுதங்களை தருவிக்கவும் வழி ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Recent Posts

பரபரப்பான மேட்ச்.., மிரட்டிய அவேஷ் கான்.., ராஜஸ்தான் அணியை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி.!

பரபரப்பான மேட்ச்.., மிரட்டிய அவேஷ் கான்.., ராஜஸ்தான் அணியை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…

1 hour ago

RR vs LSG: மார்க்ராம் – படோனி அதிரடி அரைசதம்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு..!

ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…

3 hours ago

போதைப் பொருள் வழக்கு: மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜாமீனில் விடுவிப்பு.!

கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…

4 hours ago

“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…

4 hours ago

மிரட்டல் நாயகன் பட்லர் தொட்டதெல்லாம் தூள்.., டெல்லியை வீழ்த்தி குஜராத் மாஸ் வெற்றி.!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…

5 hours ago

ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…

5 hours ago