சீனாவை எதிர்பார்ப்பதை இந்தியா குறைக்கவேண்டும்- நிதி ஆயோக் துணைத்தலைவர்

Default Image

சீனாவை சார்ந்திருப்பதை குறைப்பதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் கூறியுள்ளார்.

சீனாவுடனான ஒட்டுமொத்த வர்த்தகப் பற்றாக்குறையில் இந்தியா, கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, சீனாவை சார்ந்திருப்பதைக் குறைப்பதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் சுமன் பெர்ரி கூறினார். மருந்து பொருட்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க சில முக்கியமான பொருட்களுக்கு சீனாவை சார்ந்திருப்பதை குறைப்பதில், இந்தியாவின் கவனம் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

சமீபத்தில் சீன சுங்கத்துறை வெளியிட்ட தகவல்களின்படி, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகம் 2022 இல் 135.98 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், அதே நேரத்தில் சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை முதல் முறையாக 100 பில்லியன் டாலர்களைக் கடந்தது. சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறையை குறைக்க, இந்தியா ஒரு துறை வாரியான யுக்தியை வகுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்தியச் சந்தையைப் பிடிக்க விரும்பும், சீன நிறுவனங்களை தடுக்கவேண்டும், என்று பெரி வலியுறுத்தினார். இந்தியாவிற்கான சீனாவின் ஏற்றுமதி 118.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது, இது ஆண்டுக்கு ஆண்டு 21.7 சதவீதம் அதிகரித்து வருகிறது. 2022 ஆம் ஆண்டில், இந்தியாவில் இருந்து சீனாவின் இறக்குமதிகள் 17.48 பில்லியன் அமெரிக்க டாலராகக் குறைந்துள்ளது, இது ஆண்டுக்கு ஆண்டு 37.9 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்