ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா செக்டாரில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் இன்று காலை 06.30 மணி அளவில் நடைபெற்றது.
இந்திய ராணுவம் தரப்பிலும் எதிர்த்தாக்குதல் கொடுக்கப்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் மரணமடைந்தார். இறந்த டேராடூனை சார்ந்த லன்ஸ் நாயக் சந்தீப் என தெரியவந்தது.
இவர் 15 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணி புரிந்துள்ளார். கடந்த சில நாட்களாக இரு நாடு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய ராணுவ வீரர் லன்ஸ் நாயக் சந்தீப் இறந்ததை தொடர்ந்து இந்திய ராணுவம் பதில் தாக்குதலை நவ்ஷேரா எல்லை அருகே இருந்த பாகிஸ்தான் ராணுவ சாவடி மீது நடத்தியது.
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சிலர் உயிரிழந்திருக்கலாம் என இந்திய ராணுவம் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…
துபாய் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன்…