கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கொரோனா தொற்று பாதிப்பில் அமெரிக்காவிற்குப் பிறகு உலகின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது. இதுவரை இந்தியாவில் 4,202,562 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 71,687 பேர் உயிரிழந்துள்ளனர், 3,247,297 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 91,723 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1008 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 883,578 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக அறிக்கையின் படி, உலகளவில் கொரோனா தொற்றில் முதலிடம் இருக்கும் அமெரிக்காவில் இப்போது 62 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளன. இதில் 1.88 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இந்தியா தற்போது பிரேசில் நாட்டை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தில் உள்ளது .
இதற்கிடையில், இந்தியாவில் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக விளங்கும் மகாராஷ்டிராவில் 9,07,000 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது, இதில் ஏற்கனவே 26,000 க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். மகாராஷ்டிராவுக்குப் பிறகு மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது மாநிலமாக ஆந்திரா உள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…