ஒலிம்பிக்கில் ஹாக்கி ஆடவர் அணி ஜெர்மனியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ள நிலையில், ஹாக்கி அணியை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்துக்கான ஆடவர் ஹாக்கி போட்டியில் ஜெர்மனியை 5:4 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இந்தியா வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. 41 ஆண்டுகளுக்கு பின்பதாக இந்திய ஆடவர் அணி ஹாக்கி போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது. எனவே இந்திய ஹாக்கி ஆடவர் அணிக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி அவர்களும் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்றைய நாள் ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் பொறிக்கப்படும் நாள். வெண்கல பதக்கத்தை வென்ற எங்கள் ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள். இந்த சாதனை மூலமாக ஒட்டுமொத்த நாட்டின், குறிப்பாக நமது இளைஞர்களின் கற்பனையை அவர்கள் கைப்பற்றியுள்ளனர். ஆண்கள் ஹாக்கி அணியை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…