இந்தியாவில் கொரோனோ வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ல சூழலில் வெளிநாடுகளில் இருந்து கொரோனோ தொற்று பரவாமல் தடுக்க இந்திய அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை விதித்து வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே வெளிநாட்டு பயணிகள் இந்தியா வருவதையும், வெளிநாட்டு விமானங்கள் இந்தியாவில் தரையிறங்குவதற்கும் மத்திய அரசு ஏற்கனவே தடை விதித்திருந்தது. இந்நிலையில், தற்போது அந்த தடையை ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வரை வரை நீட்டித்துள்ளது. இது குறித்து விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது, இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சர்வதேச விமானங்கள் இந்தியாவில் தரை இறங்குவதற்கு மத்திய அரசு ஏற்கனவே வரும் மார்ச் 29ம் தேதி வரை தடை விதித்து இருந்தது. இந்நிலையில் அந்த தடையை மேலும் நீட்டித்து வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த தடையானது சர்வதேச சரக்கு விமானங்களுக்கு பொருந்தாது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…