உலகில் பல ஆயிரம் உயிர்களை காவு வாங்கிக்கொண்டிருக்கும் கொடிய உயிர்க்கொல்லி ‘கொரோனா’ வைரஸை விரட்ட, நேற்று(மார்ச் 22) நாடு முழுவதும் நடந்த மக்கள் ஊரடங்கில், தமிழகம் புதிய வரலாறு படைத்துள்ளது. நேற்று , இந்திய சமூகத்தையும், மக்களையும் காக்க, ஜாதி, மத, பேதமின்றி மக்கள் ஒத்துழைப்பு அளித்து, மனித உயிர்களை காக்க உறுதியேற்றனர். அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், போக்குவரத்து என அனைத்தையும் நிறுத்தி ஒத்துழைப்பு அளித்தனர். நேற்றைய ஊரடங்கின் போது, மருந்து கடையினர் சேவை மனப்பான்மையுடன், கடைகளை திறந்து வைத்திருந்தனர். மருத்துவமனை ஊழியர்கள், சுகாதார துறையினர், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி துாய்மை பணியாளர்கள், சுகாதார பிரிவினர், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உள்ளிட்டோரும், மக்கள் சேவையில் தங்களை ஈடுபடுத்தி கொண்டனர்.
மேலும், மக்களின் ஊரடங்கையும், அரசுத்துறையினரின் அர்ப்பணிப்பையும், பத்திரிகை, ‘டிவி’ பணியாளர்கள், களத்தில் இறங்கி தொகுத்து, களப்பணியாற்றினர். அத்தியவசிய பொருளான பால் மற்றும் பால் பொருள்களுக்கு எந்த தட்டுப்பாடும் ஏற்படவில்லை. இந்த சுய ஊரடங்கு முடிந்ததும் மக்கள் நம் பாரத பிரதமர் மோடி அவர்களின் வேண்டுகோளுக்கு இனங்க சேவை துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மக்கள் தங்கள் வீடுகளின் வாசல்களிலும், மாடிகளில் நின்றும், கைகளை தட்டியும் மணியடித்தும் நன்றிகளை தெரிவித்தனர். மேலும் காவல் பணியில் இருந்த காவலர்கள் தங்கள் கார்களின் சைரங்களை ஒலிக்க விட்டு நன்றி தெரிவித்தனர்.
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…