இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு நேற்று ஒரே நாளில் புதியதாக 3,787 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 104 பேர் உயிரிழந்து உள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 4,628,549 பேர் கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 308,645 பேர் உயிரிழந்து உள்ளனர்.
சில நாடுகளில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகளவில் உள்ளது. இந்தியா குறைவான தாக்கம் கொண்ட நாடாக கருதப்பட்டாலும், தற்பொழுது வரை 85,940 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தற்பொழுது வரை 2,752 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் உயிரிழந்தவர்கள் தவிர 30,153 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தவர்கள், குணமாகியவர்கள் தவிர்த்து தற்பொழுது 52,773 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் புதியதாக 3,787 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 104 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கொரோனா ஆரம்பமாகிய சீனாவில் கூட பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 82,933 ஆகவும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,633 ஆகவும் தான் உள்ளது. தற்பொழுது புதியதாக 4 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்றுள்ளது. அத்துடன் இறப்பு ஒன்றுமில்லை.
சீனாவை விட இந்தியா கொரோனா பாதிப்பில் அதிகளவில் உள்ளது. ஆனால் உயிரிழப்பு பாதிக்கு பாதி குறைவாகவே உள்ளது. சீனாவையும் மிஞ்சி கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. எனவே, நாம் பாதுகாப்பாக “தனித்திருப்போம், விழித்திருப்போம், வீட்டிலிருப்போம்”.
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து சவரன் ரூ.65,000-ஐ நெருங்கியுள்ளது. கடந்த வாரத்தில் தங்கம்…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : டிராகன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து மார்க்கெட் எங்கேயோ சென்று விட்டது என்று சொல்லலாம்.அந்த…
டெல்லி : கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றியடைந்து கோப்பையை கைப்பற்றிய நிலையில், அந்த சந்தோசத்தோடு டி20…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
சென்னை : தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பலரும்…