இந்தியா

உலகக்கோப்பையில் தோல்வியடைந்த இந்தியா.. ரசிகர் உயிரிழப்பு ..!

Published by
murugan

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை  இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 6-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றி உள்ளது. ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்ததால் கோடிக்கணக்கான ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.

மைதானத்தில் இருந்த ரசிகர்களுடன், டிவிக்களில் போட்டியை பார்த்த ஒட்டு மொத்த ரசிகர்களால் இந்த தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. இந்நிலையில், இந்த தோல்வியை தாங்க முடியாமல் ரசிகர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். திருப்பதி ரூரல் மண்டல் துர்காசமுத்திரத்தைச் சேர்ந்த மண்டியம் சுதாகரின் மகன் ஜோதிகுமார் யாதவ் (32), எம்சிஏ படித்துவிட்டு சாப்ட்வேர் வேலை செய்து வருகிறார்.

தற்போது வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையில் பணியாற்றி வருகிறார். ஜோதி குமார் யாதவ், சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது அதிக ஈடுபாடு கொண்டவர். மேலும் தனது நண்பர்களுடன் வீட்டில் இருந்து இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை பார்த்துள்ளார். இந்த போட்டியின் பரபரப்பு காரணமாக இரவு 7 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

உடனடியாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் சிகிச்சைக்காக அவரை  மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் துர்காசமுத்திரம் சோகத்தில் மூழ்கியது.

 

Published by
murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

13 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

15 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

15 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

15 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago