இலங்கைக்கு 740 கோடி கடன் வழங்கிய இந்தியா – எதற்காக தெரியுமா?

Published by
Rebekal

இலங்கையில் சூரிய ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இந்தியா 740 கோடி ரூபாய் கடனாக வழங்கியுள்ளது.

இலங்கை அரசு 2030- ஆம் ஆண்டுக்குள் மொத்த எரிசக்தி பயன்பாட்டில் 70 சதவீதத்தை மரபுசாரா மூலங்கள் வழியாக உற்பத்தி செய்வதற்கான இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடையும் விதமாக சூரிய ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி இலங்கைக்கு சுமார் 740 கோடி கடன் உதவியாக வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் புதன்கிழமை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அவர்கள் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.

இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பல்வேறு துறைகளில் நிலவி வரக்கூடிய ஒத்துழைப்பை வளப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளதாகவும், 2018 ஆம் ஆண்டு இந்தியா முன்னின்று உருவாக்கிய சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டமைப்பில் இலங்கையும் உறுப்பு நாடாக உள்ளதால், மற்ற நாடுகளில் சூரிய எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கான உதவிகள் வழங்கப்படும் என இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்டதாகவும் இந்த வகையில் தான் தற்பொழுது இலங்கைக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் வீடுகளின் மேல் இந்த சூரிய ஒளி தகடுகளை அமைத்து சூரிய ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளுக்காக தான் இந்த கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்தியாவும் இலங்கையும் இணைந்து சூரிய எரிசக்தி உற்பத்தியில் பயணித்து வருவதாகவும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

41 mins ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

45 mins ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

2 hours ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

3 hours ago