தென் துருவம் அருகே சென்ற முதல் நாடு இந்தியா! சந்திரயான் 3 திட்ட இயக்குனர் பி வீரமுத்துவேல் பெருமிதம்!

Published by
பால முருகன்

கடந்த ஜூலை 14ல-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலம்,இன்று மாலை 5.44 மணிக்கு நிலவின் தென்துருவத்தை நோக்கி பயணிக்க தொடங்கியது, 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது. இதன் மூலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற வரலாற்று சாதனையை இந்தியா படைத்துள்ளது. திட்டமிட்டபடி ‘சந்திரயான் 3’ விண்கலம் நிலவில் தரையிறங்கி உள்ள நிலையில், பல அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் என பலரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

அதைப்போல, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சந்திரயான்-3 திட்ட இயக்குனர் பி வீரமுத்துவேலுக்கு தமிழகத்தை சேர்ந்த அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், ‘சந்திரயான் 3’ விண்கலம் நிலவில் தரையிறங்கிய பிறகு பேசிய இயக்குனர் பி வீரமுத்துவேல் “இன்று நிலவின் தென் துருவம் அருகே சென்ற முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளோம். இந்தத் திட்டத்தின் ஒட்டுமொத்த பயணமும் திட்டமிட்ட நேரப்படி கச்சிதமாக நடந்து வெற்றி பெற்றிருப்பது பெருமிதமாக உள்ளது.

இந்தத் திட்டத்தின் ஒட்டுமொத்த பயணமும் திட்டமிட்ட நேரத்தின் படி, கன கச்சிதமாக நடந்து வெற்றி பெற்றிருப்பது பெருமிதமாக உள்ளது. நிலவின் தென் துருவத்தின் அருகில் லேண்டரைக் கொண்டு சென்று நிலவைத் தொட்ட முதல் நாடு, நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கும் நான்காவது நாடு என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது இந்தியா.

எஸ். சோமநாத் அவர்களின் தொலைநோக்குப் பார்வையும், தளராத உறுதியும் எங்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தியது. இந்த வெற்றிக்கு வழிவகுத்த அனைத்து விஞ்ஞானிகளும் மிக்க நன்றி” என இயக்குனர் பி வீரமுத்துவேல் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

15 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

22 mins ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

41 mins ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

1 hour ago

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

2 hours ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

2 hours ago