உங்களது வெற்றியால் இந்தியா பெருமைகொள்கிறது என வெள்ளி பதக்கம் வென்ற பவினா படேலுக்கு ராகுல் காந்தி வாழ்த்து.
டோக்கியோ பாராலிம்பிக் மகளிர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில், இந்தியாவின் பவினா படேல், சீனாவின் மியாவோ ஜாங்கை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதனைத்தொடர்ந்து, இறுதி போட்டியில் பவினா படேல், உலகின் நம்பர் 1 வீராங்கனை சீனாவின் ஜோஃவ் யிங்கை எதிர்கொண்டதில் பவினா 3:0 (11-7, 11-5, 11-6) என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.
இதனால், பவினா படேலுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இதுவே பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும். பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். வெள்ளி பதக்கம் வென்ற பவினா படேலுக்கு பிரதமர் உட்பட பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்,.
அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற எம்பியுமான ராகுல் காந்தி வெள்ளி பதக்கம் வென்ற பவினா படேலுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், வெள்ளி பதக்கம் வென்ற பவினா படேலுக்கு வாழ்த்துக்கள். உங்கள் சாதனையை இந்தியா பாராட்டுகிறது. உங்களது வெற்றியால் இந்தியா பெருமைகொள்கிறது என தெரிவித்துள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…