ஆப்கானிஸ்தானின் நிலைமையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்பொழுது தலிபான் ஆட்சியை கைப்பற்றி உள்ளதால் அந்நாட்டில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் தற்பொழுது தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முன்னதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் உட்பட ஐநா சபையின் முக்கிய தலைவர்களுடன் ஆப்கானிஸ்தானின் நிலை குறித்து பேசியிருந்தார்.
தற்பொழுதும் ஜெய் சங்கர் அவர்கள், செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், மற்ற நாடுகளை போலவே நாங்களும் ஆப்கானிஸ்தானின் நிலைமையை மிக உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என கூறியுள்ளார். தற்பொழுது ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதி செய்வதிலும் தான் எங்கள் கவனம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …