இந்தியா தடுப்பூசித் திட்டத்தின் சர்வதேச மையமாக திகழ்கிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

Published by
Rebekal

கொரோனா தடுப்பூசி திட்டத்தின் சர்வதேச மையமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி அவர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் ஸ்ரீரமச்சந்திரா இருதய நிறுவனத்தின் 75 ஆவது ஆண்டு விழாகொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி அவர்களும் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றி உள்ளார். அப்போது பேசிய அவர் கொரோனா வைரஸ் தொற்று நேரத்தில் இந்தியாவின் நிலையை எண்ணி ஒட்டுமொத்த உலகமே கவலைப்பட்டது. ஆனால், கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தற்போது ஒட்டு மொத்த உலகத்திற்கும் உத்வேகம் அளிக்கும் விதமாக இருப்பதாகவும், கடந்த ஆறு ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய பொது சுகாதாரத் திட்டங்களை இந்தியா கையிலெடுத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பலரது வாழ்வை இந்தியாவின் பொது சுகாதார திட்டங்கள் தொட்டு உள்ளதாகவும், கொரோனா வைரஸ் தொற்று வருவதற்கு முன்பாகவே இந்திய நல்வாழ்வு மீதான கவனத்தை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் ,உலகம் கொரோனா வைரஸ் மருந்துக்கான தேவையில் இருந்த பொழுது உலகின் பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை இந்திய அனுப்பி வைத்ததாகவும், இதில் தான் பெருமிதம் அடைவதாகவும் தெரிவித்துள்ளார். தடுப்பூசித் திட்டத்தின் சர்வதேச மையமாக இந்தியா திகழ்வதாகவும், கொரோனா வைரஸ் தடுப்பூசியில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதுடன் உள்நாட்டில் எவ்வளவு அக்கறை உள்ளதோ அதே அக்கறையைக் உலக அளவிலும் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago