கொரோனா தடுப்பூசி திட்டத்தின் சர்வதேச மையமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி அவர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் ஸ்ரீரமச்சந்திரா இருதய நிறுவனத்தின் 75 ஆவது ஆண்டு விழாகொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி அவர்களும் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றி உள்ளார். அப்போது பேசிய அவர் கொரோனா வைரஸ் தொற்று நேரத்தில் இந்தியாவின் நிலையை எண்ணி ஒட்டுமொத்த உலகமே கவலைப்பட்டது. ஆனால், கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தற்போது ஒட்டு மொத்த உலகத்திற்கும் உத்வேகம் அளிக்கும் விதமாக இருப்பதாகவும், கடந்த ஆறு ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய பொது சுகாதாரத் திட்டங்களை இந்தியா கையிலெடுத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பலரது வாழ்வை இந்தியாவின் பொது சுகாதார திட்டங்கள் தொட்டு உள்ளதாகவும், கொரோனா வைரஸ் தொற்று வருவதற்கு முன்பாகவே இந்திய நல்வாழ்வு மீதான கவனத்தை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் ,உலகம் கொரோனா வைரஸ் மருந்துக்கான தேவையில் இருந்த பொழுது உலகின் பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை இந்திய அனுப்பி வைத்ததாகவும், இதில் தான் பெருமிதம் அடைவதாகவும் தெரிவித்துள்ளார். தடுப்பூசித் திட்டத்தின் சர்வதேச மையமாக இந்தியா திகழ்வதாகவும், கொரோனா வைரஸ் தடுப்பூசியில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதுடன் உள்நாட்டில் எவ்வளவு அக்கறை உள்ளதோ அதே அக்கறையைக் உலக அளவிலும் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.
டெல்லி : 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை இன்று மாலை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. டெல்லியில் உள்ள…
தெஹ்ரான்: ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40…
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…