Categories: இந்தியா

INDIA : இந்திய ஜனாதிபதி to ‘பாரத்’ ஜனாதிபதி.! காங்கிரஸ் தலைவர் கடும் விமர்சனம்.!

Published by
மணிகண்டன்

இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, தென் கொரியா, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா போன்ற 20 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஜி20 கூட்டமைப்பானது இந்த வருடம் இந்தியா தலைமையின் கீழ் ஆலோசனை கூட்டங்களை மேற்கொள்கிறது.

இதன் உச்சி மாநாடு அடுத்த வாரம் தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது இதில் பிரதமர் மோடி உட்பட, ஜி20 உறுப்பினர்  நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இதற்கான அழைப்பிதழ் பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும், முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

இதில், குடியரசு தலைவருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பிதழில் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதில், பாரத் குடியரசு தலைவர் என பதிவிட்டுள்ளனர் என்று தெரிகிறது. இதனை குறிப்பிட்டு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது X சமூக வலைத்தளத்தில் விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

அதில், குடியரசு தலைவருக்கு செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ள G20 விருந்துக்கு வழங்கப்பட்ட அழைப்பிதழில் ‘இந்திய ஜனாதிபதி’ என்பதற்கு பதிலாக ‘பாரதத்தின் ஜனாதிபதி’ என்று அச்சிட்டு அனுப்பியுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 1ன் படி “இந்தியாவானது மாநிலங்களின் ஒன்றியமாக இருந்து வருகிறது.  ஆனால் இப்போது இந்த “ஒன்றிணைந்த மாநிலங்கள்” என்பதில் கூட ஆளும் கட்சி திருத்தம் செய்துள்ளது என விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

45 minutes ago

உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…

1 hour ago

இந்தியாவின் அடுத்த நகர்வு.., போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி!

சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…

2 hours ago

இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!

காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…

3 hours ago

காஷ்மீர் தாக்குதல்: “நாங்கள் இல்லை..” – கண்ணீர்விட்டு கதறும் லஷ்கர்-இ-தொய்பா.!

காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…

3 hours ago