“உலக நாடுகளை விட, கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகம்”- மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்!

Published by
Surya

உலகநாடுகளை விட, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் மற்ற உலகநாடுகளை விட இந்தியாவில் தான் அதிகம் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்த கொண்டே வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 25,30,490 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 18,09,702 பேர் வீடு திரும்பியுள்ளனர். அதில் 49,170 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், இந்தியா 130 கோடி மக்கள் தொகையுடன் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும், கொரோனா பாதித்தோர் பட்டியலில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக மூன்றாவது நாடாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் முதல் பாதிப்பை உறுதிசெய்தபோது, கொரோனாவுக்கான பரிசோதனை மையம், ஒன்றே ஒன்று மட்டும் இருந்தது. ஆனால் தற்பொழுது 1,400 க்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் மற்ற உலகநாடுகளை விட இந்தியாவில் தான் அதிகம் எனவும், உயிரிழப்பு விகிதம் மிகக் குறைவு எனவும் தெரிவித்தார்.

மேலும், காசநோயை அகற்ற, உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த இலக்கை விட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே (அதாவது 2025- ம் ஆண்டிற்குள்) எட்டிவிடும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். 2022 இறுதிக்குள், ஆயுஷ்மான் பாரத் பி.எம்.ஜே.ஏ திட்டத்தின் கீழ், 1,50,000 ஆரோக்கிய மையங்களை மத்திய அரசு அமைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்! 

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…

5 hours ago

சிறுமி மீது தவறு? சர்ச்சை பேச்சு எதிரொலி.! மயிலாடுதுறை ஆட்சியர் அதிரடி மாற்றம்!

மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…

7 hours ago

தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…

9 hours ago

AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…

10 hours ago

“கைதுக்கு நான் பயப்படவில்லை. இப்போதே விசாரணைக்கு தயார்” சீமான் பரபரப்பு பேட்டி!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…

10 hours ago

“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!

தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…

13 hours ago