இலங்கை எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க 2,200 கிலோ உலர் ரசாயனதூளை இந்தியா அனுப்பியுள்ளது!

Default Image

இலங்கை எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க 2,200 கிலோ உலர் ரசாயனதூளை இந்தியா அனுப்பியுள்ளது.

கடந்த செப்டம்பர் மூன்றாம் தேதி இலங்கையில் இருந்து வந்த எம்டி நியூ டைமன் என்னும் கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இலங்கை கடற்படையின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கையில் இருந்து பல்வேறு கடலோர காவல்படை வந்திருந்தாலும், இந்தியாவிலுள்ள கடலோர காவல் படையினரும் இலங்கைக்கு அனுப்பப்பட்டு உதவி வருகின்றனர். இந்நிலையில் தீயை அணைப்பதற்காக இந்தியாவிலிருந்து 2,200 கிலோ உலர் ரசாயனத் துறை அனுப்பியுள்ளதாக கடல்சார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது பெரும் போராட்டத்துக்குப் பிறகு முற்றிலுமாக தீ அணைக்கப்பட்டு இருந்தாலும் வெப்பம் காரணமாக புதிதாக தீ ஏற்பட்டுள்ளதால் அதை கட்டுப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்