இந்த நாட்டின் சுற்றுலா பயணிகளுக்கு இந்தியா தடை!

Published by
Edison

உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாகப் பரவிய நிலையில்,சர்வதேச விமான போக்குவரத்தை மத்திய அரசு தடை செய்திருந்தது.அதன்பின்னர் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு,கடந்த  மார்ச் 27 முதல் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்கள் சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தன.

இந்நிலையில்,சீனாவிலிருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான விசாவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.முன்னதாக சீனாவில் கொரோனா பெருந்தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில்,அங்கு பயிலும் 20,000 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சீனாவை விட்டு வெளியேறி இந்தியா வந்தனர்.

ஆனால்,தற்போது இந்திய மாணவர்களை சீனாவுக்குத் திரும்ப அனுமதிக்க சீன அரசு தயக்கம் காட்டி வருகிறது.அதே சமயம்,பெய்ஜிங் தாய்லாந்து,பாகிஸ்தான் மற்றும் இலங்கை மாணவர்களை சீன அரசு  திரும்ப அனுமதித்துள்ளது.மேலும்,இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்,கடந்த மாதம் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயுடன் இந்தப் பிரச்சினையை எடுத்துரைத்தார்,ஆனால் பெய்ஜிங் இன்னும் பதிலளிக்கவில்லை.

இந்த நிலையில்,இந்தியா வரும் சீன பயணிகளுக்கு சுற்றுலா விசாக்கள் வழங்கப்படுவதை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.சீன அரசு,இந்திய மாணவர்களுக்கு மீண்டும் விசா வழங்கும் வரை இந்த தடை நீக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே,சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கமான IATA, “சீனா நாட்டினருக்கு வழங்கப்பட்ட சுற்றுலா விசாக்கள் இனி செல்லாது” என்று அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Recent Posts

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

17 mins ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

40 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

1 hour ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

1 hour ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

2 hours ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

2 hours ago