மன்மோகன் சிங் பிரதமர் இல்லாததை இந்தியா உணர்கிறது- ராகுல்காந்தி ட்விட்..!

Default Image

மன்மோகன் சிங் பிரதமர் இல்லாததை இந்தியா ஆழமாக உணர்கிறது என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  தெரிவித்தார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கிற்கு இன்று 88-வது பிறந்தநாளை முன்னிட்டு பல அரசியல் கட்சியினர் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  இந்தியாவின் பிரதமராக மன்மோகன் சிங் கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் மற்றும் 2014 -க்கு இடையில் இருந்தார். இந்நிலையில்,

இந்நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,  “டாக்டர் மன்மோகன் சிங் பிரதமர் இல்லாததை இந்தியா  ஆழமாக  உணர்கிறது. அவரது நேர்மை, கண்ணியம் மற்றும் அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது” என்று காந்தி கூறினார்.

மேலும் ” பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ‘HappyBirthdayDrMMSingh’ என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்