கோத்தபய ராஜபக்சே இலங்கையை விட்டு தப்பி செல்ல இந்தியா உதவியதா.?! வெளியான பரபரப்பு தகவல்கள்…

Published by
மணிகண்டன்

கோத்தபய ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோர் இலங்கையைவிட்டு வெளியேறுவதற்கு இந்தியா உதவியதாக ஆதாரங்களின்றி பொய்யான தகவல் பரவி வருகிறது. – இலங்கையில் உள்ள இந்திய அமைப்பு.

இலங்கையில் தற்போது கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அடிப்படை தேவைகளுக்கான பொருள்கள் விலை கூட கடும் ஏற்றம் அடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். நாளுக்கு நாள் இலங்கையில் மக்கள் போராட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்து உள்ளார்.

இதனை தொடர்ந்து இன்று அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது ராஜினாமாவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே அவர் இலங்கையை விட்டு தப்பி சென்று விட்டார் என்ற தகவல் தீயாய் பரவியது.

ஆனால், இலங்கை சபாநாயகர், கோத்தபயா ராஜபக்சே கண்டிப்பாக இன்று புதன்கிழமை தனது ராஜினாமாவை அறிவிப்பார் என்று கூறினார். இதற்கிடையில் கோத்தபய ராஜபக்சே இலங்கையை விட்டு வெளியேற இந்தியா உதவியதாக ஒரு ஆதாரமற்ற பொய்யான தகவல் பரவி வந்தது. இதற்கு இலங்கையில் உள்ள இந்திய அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

மறுப்பு தெரிவித்து தனது இணையதள பக்கத்தில். ‘கோத்தபய ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோர் இலங்கையைவிட்டு வெளியேறுவதற்கு இந்தியா உதவியதாக ஆதாரங்களின்றியும் ஊகங்களின் அடிப்படையிலும் வெளியாகியிருக்கும் செய்திகளை உயர் ஸ்தானிகராலயம் முற்றாக நிராகரிக்கின்றது.

மேலும், ‘ ஜனநாயகபெறுமானங்கள் மற்றும் விழுமியங்கள், நிறுவனமயப்படுத்தப்பட்ட ஜனநாயகஅமைப்புகள் மற்றும் அரசியலமைப்பு ரீதியான கட்டமைப்பு ஆகியவற்றின் ஊடாக செழுமை மற்றும் முன்னேற்றத்தினை நனவாக்க எதிர்பார்த்திருக்கும் இலங்கைமக்களுக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்குமென மீண்டும் வலியுறுத்தப்படுகின்றது.’ இவ்வாறு தெரிவித்துள்ளது. இதன் மூலம் கோத்தபய ராஜபக்சேவை இலங்கையை விட்டு வெளியேற இந்தியா எந்த விதத்திலும் உதவவில்லை அவ்வாறு உதவ போவதுமில்லை என்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது.

Recent Posts

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

16 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

37 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

40 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

1 hour ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

2 hours ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

2 hours ago