லடாக்கில் இந்தியாவிற்கும் ,சீனாவிற்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. கடந்த திங்கள்கிழமை இரவு பாங்கோங் த்சோ ஏரி அருகே இந்திய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சீன அரசு குற்றம் சாட்டிய நிலையில், இந்திய ராணுவம் சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.
அதில், எல்லையும் தாண்டவில்லை, துப்பாக்கி சூடு நடத்தவில்லை. சீன இராணுவ வீரர்கள் தான் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சில முறை சுட்டனர் என விளக்கம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், லடாக்கின் சுஷூல் பகுதியில் இந்திய ராணுவ, சீன இராணுவ கமாண்டர் நிலை மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தை காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணியளவில் முடிந்தது என இந்திய ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார தொடக்கத்தில் இரு தரப்பினரும் கமாண்டர் நிலை பேச்சுவார்த்தைகளை நடத்த முடிவு செய்தனர். இந்த சந்திப்புக்கான தேதி மற்றும் நேரம் முடிவு செய்யாமல் இருந்த நிலையில், திடீரென இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஜூன் மாதத்திலிருந்து 5 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஜூன் 6, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளிலும், ஜூலை 14 மற்றும் ஆகஸ்ட் 2 ஆகிய தேதிகளிலும் இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையே கமாண்டர் லெவல் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இன்று நடைபெற்றது ஆறாவது பேச்சுவார்த்தையாகும்.
இதற்கிடையில், நேற்று ஷாங்காய் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடந்தது. இந்தியா மற்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சர்கள் மாஸ்கோவில் கிட்டத்தட்ட 2 மணி நேரம் 30 நிமிடம் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…