ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் கூட்டத்தில் நமது அண்டை நாடான பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்பட்டதற்கு, மத்திய அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து, வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறியதாவது, காஷ்மீர் விவகாரத்தில், சர்வதேச நாடுகள் அனைத்தும், ‘இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை’ என்ற கருத்தை தெரிவித்துள்ளன.ஆனால், சீனா மட்டும், இந்த விஷயத்தில் தனித்து செயல்படுவது கண்டனத்துக்குரியது. இந்த விவகாரத்தில், சர்வதேச நாடுகளின் கருத்தை, சீனாவும் பிரதிபலிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
இந்தியாவின் அனைத்து விவகாரங்களிலும் மூக்கை நுழைக்கும் சீனா இந்த விவகாரத்திலும் நுழைந்துள்ளது. ஏற்கனவே சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசாரை அறிவிக்கும் இந்தியாவின் முயற்ச்சிக்கு பல வழிகளில் தடையை ஏற்படுத்தியது. இதேபோல் இந்தியா ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக அனைத்து நாடுகளும் ஆதரவு தந்த போதிலும் சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடை ஏற்படுத்தியதை நினைவு கூறலாம்.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…