கொரோனாவின் பாதிப்பு கோவாவில் அதிகரித்து வரும் நிலையில், மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது வீரியத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில் தினமும் இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். அதுபோல கோவாவிலும் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து கோவா மாநிலத்தில் ஏற்கனவே மே 9-ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து தற்பொழுதும் இந்த ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள், மளிகைக் கடைகள், மதுபானக் கடை உள்ளிட்டவை காலை 7 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை திறந்திருக அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் மருத்தகங்கள் மற்றும் உணவகங்களில் காலை 7 முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது கொரோனாவின் தாக்கம் அதிகம் காணப்படுவதால் மே 23 உடன் முடிவடைய உள்ள ஊரடங்கு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநிலத்தின் முதல்வர் பிரமோத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…