கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவி உலக மக்களை அச்சத்தில் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் அதிக பங்குகளை வகித்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பல நாடுகளில் வழக்கத்தைவிட பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு காரணமாக சிறு, குறு மற்றும் நடுத்தர விற்பனையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் உற்பத்தி இந்த வருடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வு காரணமாக பல்வேறு தொழிற்சாலைகள் பல கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகிறது. இதனால், விற்பனையாளர்கள் வெளிநாடுகளிலிருந்து மின்னணு சாதனங்களை இறக்குமதி செய்து வருகின்றனர்.
கடந்த மூன்று மாதங்களில் ஸ்மார்ட்போன்கள் இறக்குமதி அதிகமாக உள்ளது. மேலும், தீபாவளி மற்றும் நவராத்திரி பண்டிகை காலத்தில் விற்பனை அதிகரிக்கும் எனவும் கடந்த ஆண்டு இந்தியாவில் மொத்தம் 5.4 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளது. ஆனால் இந்த வருடம் 13 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கக்கூடாது என்பதற்காக தற்போது ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால், மொபைல் போன்களின் தேவை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…