கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் அதிகரிப்பு – மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்

Published by
பாலா கலியமூர்த்தி

புதிதாக பாதித்தவர்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. இருப்பினும், குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பும், உயிரிழப்பும் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளதால், நிறைவடைய இருந்த ஊரடங்கு காலத்தை மே 17 ஆம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதற்கான கட்டுப்பாட்டு தளர்வுகளுடன் கூடிய நெறிமுறைகளும் வெளியிட்டது. இந்நிலையில், சில நாட்களாக, புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை சற்று சீராக அதிகரித்து வருகிறது. இருப்பினும், குணமடைவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்றும் இதுவரை கொரோனாவில் இருந்து 11,707 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என தெரிவித்துள்ளார். இந்தியாவில் 319 மாவட்டங்களில் கொரோனா தொற்று இல்லை என்றும் இதுவரை நாடு முழுவதும் 10 லட்சத்திற்கு மேல் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 75 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள கொரோனா மருத்துவமனைகளில் இரண்டரை லட்சம் படுக்கை வசதிகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நாடு முழுவதும் இதுவரை 20 லட்சம் கவசங்களை அனுப்பி உள்ளோம். இதனிடையே 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகளை அனுப்பி இருக்கின்றோம் என கூறியுள்ளார். பின்னர் கொரோனா வைரசுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் உலக சுகாதார அமைப்பு மட்டுமின்றி உலக நாடுகளும் பாராட்டி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றி வந்தாலும், மருத்துவர்களை கவுரவமாக நடத்த வேண்டும் என்றும் இந்த கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் நிச்சியம் வெற்றி பெறுவோம் என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago