கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் அதிகரிப்பு – மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்

Published by
பாலா கலியமூர்த்தி

புதிதாக பாதித்தவர்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. இருப்பினும், குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பும், உயிரிழப்பும் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளதால், நிறைவடைய இருந்த ஊரடங்கு காலத்தை மே 17 ஆம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதற்கான கட்டுப்பாட்டு தளர்வுகளுடன் கூடிய நெறிமுறைகளும் வெளியிட்டது. இந்நிலையில், சில நாட்களாக, புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை சற்று சீராக அதிகரித்து வருகிறது. இருப்பினும், குணமடைவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்றும் இதுவரை கொரோனாவில் இருந்து 11,707 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என தெரிவித்துள்ளார். இந்தியாவில் 319 மாவட்டங்களில் கொரோனா தொற்று இல்லை என்றும் இதுவரை நாடு முழுவதும் 10 லட்சத்திற்கு மேல் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 75 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள கொரோனா மருத்துவமனைகளில் இரண்டரை லட்சம் படுக்கை வசதிகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நாடு முழுவதும் இதுவரை 20 லட்சம் கவசங்களை அனுப்பி உள்ளோம். இதனிடையே 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகளை அனுப்பி இருக்கின்றோம் என கூறியுள்ளார். பின்னர் கொரோனா வைரசுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் உலக சுகாதார அமைப்பு மட்டுமின்றி உலக நாடுகளும் பாராட்டி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றி வந்தாலும், மருத்துவர்களை கவுரவமாக நடத்த வேண்டும் என்றும் இந்த கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் நிச்சியம் வெற்றி பெறுவோம் என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

13 hours ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

14 hours ago

ஐபிஎல் 2025 சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதுதான்? தோனிக்கு இடமிருக்கா?

டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…

15 hours ago

“வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு” – அண்ணாமலை கடும் விமர்சனம்.!

சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…

17 hours ago

“ஒருவித அழுத்தமான சூழல்., ஆனாலும்., ” சுனிதா வில்லியம்ஸ் மீட்பு குறித்து நாசா கருத்து!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர்  ஜூன் மாதம் முதல் சர்வதேச…

17 hours ago

“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!

சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…

18 hours ago