டெல்லி : மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎஃப்) மற்றும் இதேபோன்ற பிற வருங்கால வைப்பு நிதி 7.1 சதவீத வட்டி விகிதமாக இருக்கும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை 3 தேதி குறிப்பிடப்பட்ட சுற்றறிக்கையில், “2024-2025 ஆம் ஆண்டில், பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற வருங்கால நிதிகளுக்கு 7.1 என்ற விகிதத்தில் வட்டி செலுத்தப்படும் என்றும் ஜூலை 1 , 2024 முதல் செப்டம்பர் 30, 2024 வரை இந்த விகிதம் அமலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலாண்டிலும்இதே வட்டி விகிதம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த முறை வட்டி விகிதத்தில் ஏந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.
இதனை, பொது வருங்கால வைப்பு நிதி (மத்திய சேவைகள்), பங்களிப்பு வருங்கால வைப்பு நிதி (இந்தியா), அகில இந்திய சேவைகள் வருங்கால வைப்பு நிதி, மாநில ரயில்வே வருங்கால வைப்பு நிதி, பொது வருங்கால வைப்பு நிதி (பாதுகாப்பு சேவைகள்) மற்றும் இந்திய ஆயுதத் துறை வருங்கால வைப்பு நிதி (ஐஓஎஃப்எஸ்) ஆகியவற்றிக்கு ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 7.1 சதவீத வட்டி விகிதங்களைப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை-செப்டம்பர் காலாண்டிற்கான சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை மத்திய அரசு மாற்றாமல், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் (SCSS) 8.2 சதவீதமாகவும், தேசிய சேமிப்புச் சான்றிதழின் (NSC) வட்டி விகிதம் 7.7 சதவீதமாகவும் இருக்கும் என என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…
சென்னை : தெரியாத சில நம்பர்களிலிருந்து அடிக்கடி போன் வந்து அதன் மூலம் மர்ம நபர்கள் பண மோசடி, செய்யும்…
சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் இந்தியா எனும் தனியார் எலக்ட்ரானிக் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த…
இஸ்ரேல் : லெபனான் மீதான தரை மற்றும் வான் வழி தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. தலைநகர் பெய்ரூட்…
சென்னை-நவராத்திரியின் நான்காவது நாள் பூஜை முறை ,நேரம் ,கடன் தீர மஹாலட்சுமியை வழிபடும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி…