எந்தெந்த மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி எவ்வளவு மீதம் உள்ளது என்பது குறித்த எண்ணிக்கையை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. தினமும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் நாடு முழுவதும் இறந்து கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு முறையான மருத்துவ வசதிகள் இன்றி மருத்துவமனை நிர்வாகமும் திணறி வருகிறது. இதனை அடுத்து மத்திய அரசாங்கம் வருமுன் காப்பதற்கான தடுப்பூசிகள் தற்போது நாடு முழுவதும் போட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.
இதனால் தடுப்பூசிக்கான தட்டுப்படும் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எந்த மாநிலத்தில் எவ்வளவு தடுப்பூசி மீதும் உள்ளது என்பது குறித்த எண்ணிக்கையை தற்பொழுது மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதாவது உத்தரபிரதேச மாநிலத்தில் தான் அதிக அளவில் தடுப்பூசி மீதமுள்ளதாம். இரண்டாவது பீகார், இந்த இரு மாநிலங்களிலும் தடுப்பூசி அதிகளவில் மீதம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்திரப்பரதேசத்தில்11,80,569 தடுப்பூசிகள் மீதமுள்ளது எனவும், 8,36,283 தடுப்பூசிகள் பீகாரில் மெதமுள்ளதாம். மகாராஷ்டிராவில் 7.49 லட்சமும், ஜார்கண்டில் 6.46 லட்சமும், டெல்லியில் 5.62 லட்சமும், கர்நாடகாவில் 5.57 லட்சமும், அஸ்ஸாமில் 5.49 லட்சமும், மேற்கு வங்கத்தில் 4.94 லட்சமும், குஜராத்தில் 4.62 லட்சமும், ராஜஸ்தானில் 3.70 லட்சமும் தடுப்பூசிகள் மீதம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…