Screenshots from Twitter Video [Image source : Twitter/@Benarasiyaa]
உத்திர பிரதேசத்தில் அமேதி மாவட்டத்தில் காவல்துறையினர் முன்னிலையிலேயே பாஜக வேட்பாளரின் கணவரை சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ தாக்கியுள்ளார்.
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதற்கட்ட வாக்குப்பதிவு மே 4ஆம் தேதி 37 மாநகராட்சிகளுக்கு நடைபெற்று முடிந்த நிலையில், நாளை (மே 11) 2ஆம் கட்டமாக 760 கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், அம்மாநிலத்தில் அமேதி மாவட்டத்தில் உள்ள பாஜக மாநகராட்சி தேர்தல் வேட்பாளர் ரஷ்மி சிங்கின் கணவர் தீபக் சிங்கை சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ ராகேஷ் பிரதாப் சிங் இன்று (புதன்கிழமை) சரமாரியாக தாக்கினார் இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவமானது, அமேதி மாவட்டத்தில் உள்ள கௌரிகஞ்ச் கோட்வாலி காவல் நிலையத்திற்குள் நடந்துள்ளது அதிர்ச்சிக்குரிய விஷயமாகும்.
அந்த வீடியோவில் எம்எல்ஏ ராகேஷ் பிரதாப் சிங் மற்றும் அவரது உதவியாளர்களை போலீசார் சமாதானப்படுத்த முயற்சிக்கும்போது, திடீரென சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ ராகேஷ் பிரதாப் பாஜக வேட்பாளரின் கணவரை போலீசார் முன்னிலையிலேயே அடித்தார்.
நியூ சண்டிகர் : இன்று நியூ சண்டிகர் மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில்…
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகை சிட்னி ஸ்வீனி, தனது குளியல் நீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சோப்புகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி தலைப்பு…
நியூ சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஏற்கனவே, பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டது.…
சென்னை : இன்று (மே 30) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய…
சென்னை :2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தீயை…
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை…