கடந்த ஒரு 7 நாட்களாக அசாமில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதியாகவில்லை என அசாம் மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை, கொரோனா தொற்றால் இந்தியா முழுவதும், 21,393 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 681 பேர் உயிரிழந்துள்ளனர். 4,258 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
இதில் அசாம் மாநிலத்தில் மட்டும் இதவரை 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில், 19 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் ஒரு நபர் மட்டும் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார். கடந்த ஒரு 7 நாட்களாக அசாமில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதியாகவில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து, அம்மாநில சுகாதாரதுறை அமைச்சர், ‘ உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் முறை சிறப்பாக உள்ளது. இதுவரை 5,789 பேரின் பரிசோதனை மாதிரிகள்ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 214 பேரின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை எனவும், மும்பையில் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வரும் 25-ஆம் தேதி கவுகாத்தியில் உள்ள மீட்கால் கல்லூரியில் பத்திரிகையாளர்களுக்கு இலவச கொரோனா பரிசோதனைகள் செய்யப்படவுள்ள.’ என தெரிவித்தார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…