கடந்த 4 நாட்களில் மட்டும் இந்தியாவில் 44.54 லட்சம் பேருக்கு கொரானா தடுப்பூசி போடப்பட்டுள்ளது – மத்திய சுகாதார அமைச்சகம்!

Published by
Rebekal

இந்தியாவில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 4 லட்சத்து 54 ஆயிரத்து க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதையும் உலுக்கி வரும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்டு கொண்டிருந்த நிலையில், தற்பொழுது சில தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 16ம் தேதி முதல் தடுப்பூசி போடுவதற்காக பணிகள் துவங்கப்பட்டது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி 4 லட்சத்து 54 ஆயிரத்து 49 பேருக்கு போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த 3 நாட்களில் தடுப்பூசி போட்டவர்களில் மிக குறைந்த அளவாக 0.18 சதவீதம் பேருக்கு மட்டுமே பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், 0.002 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழு மாதங்களுக்குப் பிறகு கொரோனா வைரஸால் தினசரி ஏற்படக்கூடிய உயிரிழப்புகளின் எண்ணிக்கை 140 க்கும் கீழ் குறைந்துள்ளதாகவும், தற்பொழுது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2 லட்சமாக குறைந்துவிட்டதாகவும் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

3 mins ago

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

38 mins ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

41 mins ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

1 hour ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

1 hour ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

2 hours ago