4000-ஐ கடந்த கொரோனா.! 24 மணிநேரத்தில் 312 பேருக்கு பாதிப்பு.!

Published by
மணிகண்டன்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. அதனால் அந்தந்த மாநிலங்களில் குறிப்பிட்ட அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.இந்த கொரோனா வைரஸானது பரிணாமம் அடைந்து தற்போது JN.1 எனும் கொரோனா மாறுபாடு பரவி வருகிறது.

புதிய கொரோனாவிற்கு தடுப்பூசி தேவையா..? மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!

கடந்த 24 மணிநேரத்தின் படி இந்தியாவில் 312 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது கொரோனா சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 4054ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,33,334 என உயர்ந்துள்ளது.

மாநில அளவில் அதிகபட்சமாக கேரளாவில் 128 பேருக்கும், கர்நாடகாவில் 73 பேருக்கும், மகாராஷ்டிராவில் 50 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 பேருக்கும், தெலங்கானாவில் 8 பேருக்கும் , உத்திர பிரதேசத்தில் 7 பேருக்கும் , மேற்கு வங்கத்தில் 2 பேருக்கும், ராஜஸ்தானில் 11 பேருக்கும், புதுச்சேரியில் 3 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 2 பேருக்கும், ஆந்திர பிரதேசத்தில் 5 பேருக்கும், டெல்லியில் 7 பேருக்கும், கோவாவில் 5 பெருக்கும் , குஜராத்தில் 3 பேருக்கும், அசாம், பீகார், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

JN.1கொரோனாவிற்கு தற்போது பூஸ்டர் டோஸ் அல்லது நான்காவது தடுப்பூசி போட வேண்டிய அவசியம் இல்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இந்த புதிய துணை மாறுபாட்டின் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை என்பதும் நிம்மதியான விஷயம். JN.1 துணை மாறுபாட்டின் அறிகுறிகள் காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், இருமல், சில சமயங்களில் வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான உடல் வலிகள் ஆகியவை இருக்கும்.  இவை பொதுவாக ஒரு வாரத்திற்குள் சரியாகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

SRH-க்கு ‘ஷாக்’ கொடுத்த தாக்கூர்! லக்னோ முதல் வெற்றியை ருசித்தது எப்படி?

ஹைதராபாத் :  ஐபிஎல் 2025-ல் நேற்றைய போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இந்த…

12 minutes ago

காலில் விழுவதற்கு சம்பளம் கொடுத்தாரா ரியான் பராக்? கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

கவுகாத்தி : மார்ச் 26, 2025 அன்று, குவாஹாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா…

13 hours ago

கொல்கத்தா ஹைதராபாத் இல்லை…இந்த 4 அணிகள் தான் பிளேஆஃப் போகும்…அடிச்சு சொல்லும் இர்ஃபான் பதான்!

சென்னை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஐபிஎல் 2025 தொடரில் எந்த  4 அணிகள் பிளேஆஃப்…

14 hours ago

தீர்ந்தது சிக்கல்..வீர தீர சூரன் படம் வெளியிட அனுமதி கொடுத்த டெல்லி நீதிமன்றம்!

சென்னை : இன்று விக்ரம் நடிப்பில் உருவாகியிருந்த வீர தீர சூரன் திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில்…

16 hours ago

பதவி விலகனும் இல்லைனா இபிஎஸ் அவமரியாதையை சந்திப்பார்! ஓபிஎஸ் பதிலடி!

சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக உள்ள நிலையில், அதில் இன்னும் பரபரப்பை…

16 hours ago

ஏன் முடியாது? கண்டிப்பாக 300 அடிப்போம்…ஹைதராபாத் பயிற்சியாளர் அதிரடி பேச்சு!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே இந்த சீசனின் தொடக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 286 ரன்கள் குவித்து மற்ற…

18 hours ago