இன்று முதல் திருப்பதியில் 12,750 பேர் தரிசனத்துக்கு அனுமதி.!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், கடந்த மார்ச் மாதம் முதல் திருப்பதி கோவில் நடை சாத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த மே 13-ம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், அம்மாநில அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
இதையடுத்து, திருப்பதி கோவிலில் கடந்த 8-ம் தேதி முதல் சோதனை முறையில் இரண்டு நாட்களுக்கு தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் உள்ளூர் வாசிகளை கோவில் நிர்வாகம் அனுமதித்தது. பின்னர், 11-ம் தேதி முதல் நாளொன்றுக்கு 9 ஆயிரத்து 750 பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாளை திருப்பதியில்மேலும் 3,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு நாளொன்றுக்கு 12 ,750 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!
April 7, 2025
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025