ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை டிசம்பர் 18 ஆம் தேதி வரை கைது செய்ய தடை…!டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு

Default Image

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை டிசம்பர் 18 ஆம் தேதி வரை கைது செய்ய தடை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக பதவி வகித்த போது, ஏர்செல் -மேக்சிஸ் நிறுவனத்துக்கு, 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.அது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்  ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு அவகாசம் வழங்கியுள்ளது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.மேலும் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோரை கைது செய்ய டிசம்பர் 18 ஆம் தேதி  வரை தடை விதித்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்