மும்பையில் 50 வயதுக்கு மேற்பட்ட, ஒவ்வொரு 100 கொரோனா நோயாளிகளிலும் 10 பேர் உயிரிழப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

மும்பையில் 50 வயதுக்கு மேற்பட்ட, ஒவ்வொரு 100 கொரோனா நோயாளிகளிலும் 10 பேர் உயிரிழக்கிறார்கள் என்று அம்மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மும்பையில் 50 வயதிற்கு மேற்பட்ட, ஒவ்வொரு 100 கொரோனா நோயாளிகளிலும் 10 பேர் தொற்று காரணமாக இறந்துள்ளார்கள் என்று மும்பை மாநகராட்சி (BMC) தெரிவித்துள்ளது. 50 வயதிற்கு மேற்பட்டவர்களின் இறப்பு விகிதம் 10.4% என்றும் இது மும்பையின் சராசரியை விட 5.4% ஆக உள்ளது என்று கூறியுள்ளது. இது 1,32,221 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 6,419 இறப்புகளின் வயது வாரியாக புள்ளிவிவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. 50 வயதிற்கு மேற்பட்டவர்களில், 80-89 வயதுக்குட்பட்டவர்களில் மிக அதிகமான இறப்பு விகிதம் 21.2% ஆகவும், கொரோனா பாதித்த 3,131 பேரில் 664 பேர் இறந்துள்ளனர்.

70-79 வயதுக்குட்பட்ட, 9,463 கொரோனா நோயாளிகளில் 1,496 பேர் உயிரிழந்துள்ளனர். இறப்பு விகிதம் 15.81% ஆக உள்ளது. 60-69 வயதுடையவர்களின் இறப்பு விகிதம் அதிகம் பதிவாகியுள்ளது. 18,454 நோயாளிகளில் இருந்து 2,122 பேர் இறந்துள்ளனர். இதன் இறப்பு விகிதம் 11.49% ஆகும். 9 வயதுக்கு குறைவான குழந்தைகளில் இறப்பு விகிதம் 0.49% மிகக் குறைவவும் என்றும் 2,439 குழந்தைகளின் 12 பேர் இறந்துள்ளனர் என்று கூறியுள்ளனர். மேலும், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பதால் அவர்களின் நோயெதிர்ப்பு திறன் தோல்வியடைகிறது. மூத்த குடிமக்களுக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள் போன்ற நோயுற்ற தன்மைகளும் அதிகம் இருப்பதால் இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 இதுவரை, பி.எம்.சி 874,275 மூத்த குடிமக்களை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 3,097 பேர் ஆக்ஸிஜன் செறிவு 95 க்கும் குறைவாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இவர்களில் 5,036 மூத்த குடிமக்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களில் வாழ்கின்றனர். இதனிடையே, மும்பையில் நேற்று புதிதாக 1,350 கொரோனா உறுதியான நிலையில், 30 பேர் இறந்துள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 140,888 ஆகவும், தற்போது 19,463 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மும்பைக்கான இறப்பு விகிதம் 5.3%, குணமடைந்தவர்களின் விகிதம் 80% ஆக இருக்கிறது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

5 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

13 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago