இவர்தான் ரியல் ஹீரோ:தண்டவாளத்தில் விழுந்த குழந்தை..!உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய இரயில்வே ஊழியர்..!

Default Image

மகாராஷ்டிராவில்,இரயில்வே தண்டவாளத்தின் கீழே விழுந்த குழந்தையை,உயிரைப் பணயம் வைத்து ரயில்வே ஊழியர் ஓடிப்போய் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள,வாங்கனி இரயில் நிலையத்தின் நடைமேடையில் சிறுவன் ஒருவன் தனது தாயுடன் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது, தீடீரென்று கால் தவறி கீழே தண்டவாளத்தில் விழுந்தான்.அப்போது அதிவேகத்தில் தண்டவாளத்தில் விரைவு இரயில் ஒன்று வந்துக் கொண்டிருந்தது.இதனைப் பார்த்த இரயில்வே ஊழியர் மயூர் ஷேல்கே என்பவர்,தன்னுயிரைப் பற்றி கூட பொருட்படுத்தாமல் உடனே ஓடிச் சென்று அச்சிறுவனை தூக்கி அவனது தாயிடம் கொடுத்துவிட்டு,ரயில் அவ்விடத்தை கடந்து செல்ல ஒரு சில வினாடிகளே இருந்த நிலையில் தானும் நடைமேடையில் ஏறி தப்பித்துக் கொண்டார்.இதனால்,அங்கு நடைபெற இருந்த பெரும் அசம்பாவிதத்தை மயூர் தடுத்தார்.

இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது,அந்த வீடியோவை இரயில்வே வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளது.இதனையடுத்து,தனது உயிரைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படாமல்,சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய இரயில்வே ஊழியர் மயூர் ஷேல்கேவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்