ஜிஎஸ்டியில் உள்ள 12 மற்றும் 18 சதவீத வரி வரம்புகளுக்கு பதிலாக, நிலையான வரி விகிதம் கொண்டு வரப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு நடைமுறையில், செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் பற்றி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அவரது பேஸ்புக் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், சில பொருட்களை தவிர அனைத்து பொருட்களும், 18 சதவிகிதம் அல்லது அதற்கு கீழ் உள்ள வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். வரி வருவாய் கணிசமாக உயரும் போது, 12 மற்றும் 18 சதவிகிதகள் ஒன்றாக இணைக்கப்பட்டு, அவைகளுக்கு பதிலாக நிலையான வரி வரம்பு ஒன்று உருவாக்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார். இந்த வரி வரம்பானது 12 மற்றும் 18 சதவிகிதங்களுக்கு இடையில் நிர்ணயிக்கப்படும் என்றும் ஜெட்லி தெரிவித்துள்ளார். இதன்மூலம் 695 பொருட்கள் ஒற்றை வரி வரம்புக்குள் கொண்டு வரப்படும். 28 சதவிகித வரம்புக்குள் உள்ள பொருட்களுக்கும் படிப்படியாக வரி குறைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…