கர்நாடகாவில் ஒரே நாளில் 1,498 பேருக்கு கொரோனா..மொத்த எண்ணிக்கை 26,815 ஆக உயர்வு.!

கர்நாடகா மாநிலத்தில் ஒரே நாளில் 1,498 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,815 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 1,498 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால்,அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,815 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் நேற்று 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 416 அதிகரித்துள்ளது.
மேலும் 571 பேர் நேற்று குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 11,098 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 15,297 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.