கர்நாடகாவில் ஒரே நாளில் 104 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு.!

Default Image

இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 4,169 பேருக்கு கொரோனா மேலும் நேற்று 104 பேர் உயிரிழப்பு.

கர்நாடகா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 4,169 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 51,422  ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 4,169  பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 51,422  ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் மேலும் இதுவரை இல்லாத அளவில் நேற்று 104 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1032 அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஒரே நாளில் 1,263 பேர் நேற்று குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 19,729 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 30,655 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்