கடந்த 24 மணி நேரத்தில் நேரத்தில் 414,188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…! 3,915 பேர் உயிரிழப்பு…!

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 414,188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,915 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல் பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இந்த வைரஸால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 414,188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இதுவரை கொரோன தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,491,598 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,915 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை, 234,083 ஆக அதிகரித்துள்ளது . 3,31,507 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை இந்தியா முழுவதும், 16,49,73,058 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக, சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025