இந்தியாவில் ஒரே நாளில் 3,720 பேருக்கு கொரோனா…20 பேர் பலி.!!

coronavirus india

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,720 பேருக்கு கொரோனா தோற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தினந்தோறும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே வருகிறது. தற்பொழுது, இந்தியாவில் ஒரே நாளில் 3,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று 3,325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 3,720 பேருக்கு தொற்று உறுதியானது.  இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,52,996-லிருந்து 4,49,56,716 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு என்ணிக்கை 5,31,564-லிருந்து 5,31,584 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 7,698 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,43,84,955-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 44,175-லிருந்து 40,177 ஆக குறைந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்