#Breaking:மீண்டும் குறைவு…கடந்த ஒரே நாளில் 1,222 பேர் கொரோனாவிலிருந்து குணமடைவு!

Default Image

இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 1033 பேருக்கு கொரோனா பாதிப்பு;1,222 பேர் கொரோனாவிலிருந்து குணமடைவு.

இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 1,086 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் 1033 ஆக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,31,958 ஆக பதிவாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் கடந்த ஒரே நாளில் 1222 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.மேலும், இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,24,98,789 ஆக அதிகரித்துள்ள நிலையில்,கொரோனாவுக்கு 43 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,21,530 ஆக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 11,639  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நாட்டில் இதுவரை 1,85,20,72,469   டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் இந்தியாவில் ஒரேநாளில் 15,37,314 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்