குஜராத்தில்,3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில்,கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில்,குஜராத்தில்,3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஹரதாஸ்பாய் கரிங்கியா என்பவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தற்போது எஸ்எம்எஸ் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது,குஜராத்தில் உப்லெட்டாவில் வசிக்கும் ஹரதாஸ்பாய் கரிங்கியா என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டில் காலமானார்.பின்னர்,அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது இறப்புச் சான்றிதழை சம்பந்தப்பட்ட துறையிலிருந்து பெற்றனர்.இந்த நிலையில்,ஹரதாஸ்பாய் கரிங்கியா இறந்து மூன்று ஆண்டுகள் கழித்து,அவர் தனது முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை மே 3 ஆம் தேதியன்று போட்டுக்கொண்டதாக அவரின் குடும்பத்தினரின் மொபைல் போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது.
இதுகுறித்து அவரது மருமகன் அரவிந்த் கரிங்கியா கூறுகையில்,”இது எப்படி சாத்தியம் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை”,என்று அதிர்ச்சியுடன் கூறினார்.
இதற்கு முன்னதாக,இதேபோன்ற வழக்கு தஹோடில் பதிவாகியுள்ளது, அதாவது,நரேஷ் தேசாய் என்பவர் சமீபத்தில் கோவின் நிறுவனத்திடமிருந்து எஸ்எம்எஸ் ஒன்றைப் பெற்றார்,அதில் அவரது தந்தை நட்வர்லால் தேசாய்க்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், நட்வர்லால் தேசாய் 2011 ஆம் ஆண்டிலேயே இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம்,நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் கொரோனா தடுப்பூசிகளின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில் இதுபோன்ற உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
சென்னை : தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தாலும் , தேர்தல் முடிந்த…
டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…