Bihar bridge collapse [Image source : Twitter/@ANI]
பீகாரில் மாநிலத்தில் 1,710 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் ஆற்றுக்குள் நொறுங்கி விழுந்தது.
பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியில், ககாரியா, அகுவானி மற்றும் சுல்தாங்கஞ்ச் எனும் ஊர்களை ஒன்றிணைக்கும் வகையில் கங்கை ஆற்றின் குறுக்கே அரசு புதிய பாலத்தை ஒப்பந்ததாரர்கள் மூலம் கட்டி வந்தது.
அப்போது நேற்று திடீரென இந்த பாலத்தின் சில பகுதிகள் நொறுங்கி ஆற்றுக்குள் விழுந்துவிட்டது. இந்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் சிலர் விடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டு உள்ளனர். இந்த பாலம் இடிந்து விழுவதும் இது முதல்முறையல்ல. ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்னர் இதே போல பாலத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுமான பணியின் போதே பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க மாநில முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…