அமெரிக்க அரசு மீண்டும் கூடுதலாக ரூ.22.5 கோடி இந்தியாவிற்கு நிதியுதவியை அறிவித்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்பட்டு உள்ளது. இதுவரை, கொரோனாவால் 33050 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், பலியானோர் எண்ணிக்கை 1,074 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு இந்தியாவுக்கு அமெரிக்க அரசு கடந்த 6-ம் தேதி (2.9 மில்லியன் டாலர்)இந்திய மதிப்பில் ரூ.21.75 கோடி நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தது. இந்நிலையில், அமெரிக்க அரசு மீண்டும் கூடுதலாக ரூ.22.5 கோடி இந்தியாவிற்கு நிதியுதவியை அறிவித்துள்ளது. இதனால் , அமெரிக்கா மூலம் ரூ.44.25 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் கூறுகையில், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வரும் இந்தியாவிற்கு ஆதரவாக இருக்கும். மேலும், அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு என அவர் கூறியுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…