வம்புக்கு இழுத்த பாகிஸ்தான்…!!! பதிலடி கொடுத்த இந்திய வெளியுறவு துறை..!!! நீங்கள் பொய்களை அள்ளி வீசும் ஒருவர் என கடுமையாக சாடல்…!!!

Published by
Kaliraj
  • இந்திய நாடாளுமன்றத்தில் தற்போது நிறைவேற்றப்பட்ட தேசிய  குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறிய கருத்திற்கு பதிலடி.
  • இதுகுறித்த இந்திய வெளியுறவு அமைச்சகம் தக்க பதிலடி.

இந்திய நாடாளுமன்றத்தில் தற்போது நிறைவேற்றப்பட்ட தேசிய  குடியுரிமை திருத்த சட்டம்  அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தளுக்கு ஆளாகி,கடந்த  2014ம் ஆண்டு வரை இந்தியாவிற்குள் அடைக்கலம்  புகுந்த இஸ்லாமியர்கள்  அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக இந்த சட்டம்  வழி வகை செய்துள்ளது. இந்த தேசிய  குடியுரிமை திருத்த மசோதா இந்திய  நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்த  போது, நமது அண்டை நாடான பாகிஸ்தானின்  பிரதமர் இம்ரான் கான் சார்பில் இதற்க்கு  கடும் எதிர்ப்பு கிளம்பியது.இந்த விவகாரத்தில், இம்ரான் கான் தனது டுவிட்டர் பதிவில் இந்திய பிரதமர்  மோடி அரசை விமர்சித்து கடுமையாக பதிவிட்டார்.

Image result for imran khanImage result for imran khan

இந்நிலையில்  இதுகுறித்து,  இந்திய வெளியுறவு  அமைச்சகம் சார்பில்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, இந்தியாவின்  உள்விவகாரங்களில் தலையிடும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் ஒரு முறை பல்வேறு தரப்பினரும் கூடியுள்ள இடத்தில்  பொய்களை பேசியுள்ளார்இதில் இருந்து அவர்  உலக அரங்குகளை இதுபோன்று தவறாக பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர் என்பது உலகம் முழுவதற்கும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.நமது அண்டை நாடான  பாகிஸ்தானின், கடந்த 72 வருடங்களில், தனது நாட்டில் வசித்து வந்த சிறுபான்மையின மக்களை திட்டமிட்டு  இந்தியாவிற்கு செல்ல  பாகிஸ்தான் கட்டாயப்படுத்தியது.  கடந்த 1971ம் ஆண்டு அந்நாட்டு ராணுவம் கிழக்கு பாகிஸ்தானிய மக்களை என்ன செய்தது என்பதனை  எவரும் மறக்க மாட்டார், ஆனால் இம்ரான் கான் அந்த நிகழ்வை மறக்க வேண்டும்  விரும்புகிறார்.அந்நாட்டு அரசு தனது சொந்த சிறுபான்மையின மக்கள் மற்றும் சக மதத்தினரின் உரிமைகளை பாதுகாக்கும் மற்றும் ஊக்குவிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என தெரிவித்து உள்ளது.  இந்த விவகாரம் தற்போது இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Kaliraj

Recent Posts

கூட்டணி பயத்துல தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்! திமுகவை சாடிய டிடிவி தினகரன்!கூட்டணி பயத்துல தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்! திமுகவை சாடிய டிடிவி தினகரன்!

கூட்டணி பயத்துல தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்! திமுகவை சாடிய டிடிவி தினகரன்!

சென்னை :  வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக…

24 minutes ago
Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மாநில உரிமைகள் குறித்த தீர்மானத்தை…

1 hour ago
“கை இருக்கும், கால் இருக்கும்., ஆனால்.?” ஆளுநரை அஜித் பட டயலாக் பேசி விமர்சித்த அன்பில் மகேஷ்!“கை இருக்கும், கால் இருக்கும்., ஆனால்.?” ஆளுநரை அஜித் பட டயலாக் பேசி விமர்சித்த அன்பில் மகேஷ்!

“கை இருக்கும், கால் இருக்கும்., ஆனால்.?” ஆளுநரை அஜித் பட டயலாக் பேசி விமர்சித்த அன்பில் மகேஷ்!

சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை…

2 hours ago

மக்களே கவனம்., படிப்படியாக உயரும் வெப்பநிலை! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை…

2 hours ago

சின்ன சின்ன டார்கெட்.! CSK சாதனையை தட்டி தூக்கிய பஞ்சாப் கிங்ஸ்!

சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்…

3 hours ago

இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!

டெல்லி : தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறைப்படி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. Fastag கணக்கில்…

4 hours ago