வம்புக்கு இழுத்த பாகிஸ்தான்…!!! பதிலடி கொடுத்த இந்திய வெளியுறவு துறை..!!! நீங்கள் பொய்களை அள்ளி வீசும் ஒருவர் என கடுமையாக சாடல்…!!!

Published by
Kaliraj
  • இந்திய நாடாளுமன்றத்தில் தற்போது நிறைவேற்றப்பட்ட தேசிய  குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறிய கருத்திற்கு பதிலடி.
  • இதுகுறித்த இந்திய வெளியுறவு அமைச்சகம் தக்க பதிலடி.

இந்திய நாடாளுமன்றத்தில் தற்போது நிறைவேற்றப்பட்ட தேசிய  குடியுரிமை திருத்த சட்டம்  அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தளுக்கு ஆளாகி,கடந்த  2014ம் ஆண்டு வரை இந்தியாவிற்குள் அடைக்கலம்  புகுந்த இஸ்லாமியர்கள்  அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக இந்த சட்டம்  வழி வகை செய்துள்ளது. இந்த தேசிய  குடியுரிமை திருத்த மசோதா இந்திய  நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்த  போது, நமது அண்டை நாடான பாகிஸ்தானின்  பிரதமர் இம்ரான் கான் சார்பில் இதற்க்கு  கடும் எதிர்ப்பு கிளம்பியது.இந்த விவகாரத்தில், இம்ரான் கான் தனது டுவிட்டர் பதிவில் இந்திய பிரதமர்  மோடி அரசை விமர்சித்து கடுமையாக பதிவிட்டார்.

Image result for imran khan

இந்நிலையில்  இதுகுறித்து,  இந்திய வெளியுறவு  அமைச்சகம் சார்பில்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, இந்தியாவின்  உள்விவகாரங்களில் தலையிடும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் ஒரு முறை பல்வேறு தரப்பினரும் கூடியுள்ள இடத்தில்  பொய்களை பேசியுள்ளார்இதில் இருந்து அவர்  உலக அரங்குகளை இதுபோன்று தவறாக பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர் என்பது உலகம் முழுவதற்கும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.நமது அண்டை நாடான  பாகிஸ்தானின், கடந்த 72 வருடங்களில், தனது நாட்டில் வசித்து வந்த சிறுபான்மையின மக்களை திட்டமிட்டு  இந்தியாவிற்கு செல்ல  பாகிஸ்தான் கட்டாயப்படுத்தியது.  கடந்த 1971ம் ஆண்டு அந்நாட்டு ராணுவம் கிழக்கு பாகிஸ்தானிய மக்களை என்ன செய்தது என்பதனை  எவரும் மறக்க மாட்டார், ஆனால் இம்ரான் கான் அந்த நிகழ்வை மறக்க வேண்டும்  விரும்புகிறார்.அந்நாட்டு அரசு தனது சொந்த சிறுபான்மையின மக்கள் மற்றும் சக மதத்தினரின் உரிமைகளை பாதுகாக்கும் மற்றும் ஊக்குவிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என தெரிவித்து உள்ளது.  இந்த விவகாரம் தற்போது இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Kaliraj

Recent Posts

ENG vs SA : இங்கிலாந்துக்கு என்னதான் ஆச்சு? 200 ரன்கள் கூட தொடல..சுருட்டிய தென்னாப்பிரிக்கா!

கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…

43 minutes ago

“இன்னும் 8 மாசம் தான்., முதலமைச்சர் தனியா தான் இருப்பார்..,” கெடு விதித்த அண்ணாமலை!

கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.  இதில்…

1 hour ago

விஜய் எதிர்க்கட்சி தலைவரா? ஆதவ் அர்ஜுனா கருத்தும்.., திருமா ரியாக்சனும்…

சென்னை : அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர்…

2 hours ago

முயற்சி பண்ணியும் முடியல…கவனமா இருங்க ப்ளீஸ்…பாடகி ஸ்ரேயா கோஷல் வேதனை!

சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…

3 hours ago

அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை..விஜய் தனியாக தான் போட்டியிடுவார் – பிரசாந்த் கிஷோர்

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…

3 hours ago

ENG vs SA : அதிரடியுடன் ஆறுதல் வெற்றிபெறுமா இங்கிலாந்து! டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில்  இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…

4 hours ago