IMPS பரிவர்த்தனை வரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்திய ஆர்.பி.ஐ..!

Published by
murugan

இனி  IMPS மூலம் ரூ.2 லட்சம் பதில் ரூ .5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது இரு மாத பணக் கொள்கை மறுஆய்வு அறிக்கையை இன்று தாக்கல் செய்தது. அதில் வங்கி ரெப்போ விகிதம் மற்றும் தலைகீழ் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. ஆனால் டிஜிட்டல் பரிவர்த்தனை மாற்ற ஒரு பெரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்யுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் நாட்டிற்கு எல்லா வகையிலும் பெரிய நெருக்கடி கொடுத்துள்ள நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மீட்புக்கு அவசியம். மக்கள் வீட்டிலேயே தங்கி டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்ய வேண்டும்.

டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் பிற மொபைல் செயலிகளை இதற்குப் பயன்படுத்தலாம். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்து பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்தார். இதைக் கருத்தில் கொண்டு, IMPS பரிவர்த்தனை செய்வதில் மிகப்பெரிய அறிவிப்பை ஆர்பிஐ அறிவித்துள்ளது. அதன்படி, உடனடி கட்டண சேவை (IMPS) மூலம் பரிவர்த்தனை செய்வதற்கான வரம்பை ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது.

இப்போது வாடிக்கையாளர்கள் IMPS மூலம் ஒரு நாளில் ரூ.5 லட்சம் பரிவர்த்தனைகளை செய்யலாம். முன்பு IMPS மூலம் ரூ .2 லட்சம் வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் ஆனால் இப்போது ரூ.5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நீங்கள் ஆன்லைனில் அதிக அளவில் பரிவர்த்தனை செய்ய எளிதாகிவிட்டது.

 

Published by
murugan

Recent Posts

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

5 minutes ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

28 minutes ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

16 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

17 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

18 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

18 hours ago