அடுத்த 2 மாதங்களுக்கு கொரோனா பாதிப்பை சமாளிக்க இந்த மாநகராட்சிகளில் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதை உறுதி செய்யவேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 138845 ஆக அதிகரித்து உள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 4027 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 57721 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ள்ளது.
மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 11 மாநகராட்சியில் தான் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70% உள்ளனர். (தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக சென்னை மாநகராட்சி உள்ளது)
இது தொடர்பாக மத்திய சுகாதார துறை செயலாளர் பிரீத்தி சுதன் நேற்று முன்தினம் இந்த 11 மாநகராட்சியின் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர்கள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை அதிகமாக உள்ளதால் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தி, உயிர் இழப்புகளை குறைக்க வேண்டும் என கூறினார்.
இந்த 11 மாநகராட்சிகளிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது. குறுகிய காலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்த்துள்ளது.
இந்நிலையில், அடுத்த 2 மாதங்களுக்கு கொரோனா பாதிப்பை சமாளிக்க இந்த மாநகராட்சிகளில் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தனி வார்டுகள் அமைப்பது, வென்டிலேட்டர்கள், தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…