கோடை வெயில் மக்களை வாட்டி வந்த நிலையில்,இன்று முதல் இரண்டு நாட்களுக்கு கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,மத்திய பிரதேசத்தில் இருந்து கேரளா வரை தென்கிழக்கு திசையில் வட-தெற்கு காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் ஏற்கனவே,கேரளாவில் கடந்த 12 நாட்களாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
மேலும்,கேரளா மாநிலத்தின் சில பகுதிகளில் அவ்வப்போது கனமழையும் பெய்து வரும் நிலையில்,இன்றும்,நாளையும் கேரளாவில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடல் கொந்தளிப்பான பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும்,இன்று மன்னார் வளைகுடா,கொமோரின் பகுதி, தமிழ்நாடு கடற்கரை மற்றும் தென்கிழக்கு அரேபிய கடல் மற்றும் லட்சத்தீவுகள் மற்றும் கேரளா-கர்நாடகா கடற்கரை பகுதிகளில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுருத்தப்பட்டுள்ளர்கள்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…