Categories: இந்தியா

சிவனின் உருவம்! வாரணாசியில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. செப்.23ல் பிரதமர் மோடி அடிக்கல்!

Published by
பாலா கலியமூர்த்தி

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கஞ்சாரி பகுதியில் செப்.23ம் தேதி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். ஆன்மீக வரலாற்றில் ஒரு சிறப்பான இடத்தை பெற்றுள்ள வாரணாசி, தற்போது மாநிலத்தின் முக்கியமான விளையாட்டு மையமாக உருவாக உள்ளது. அந்தவகையில், சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமையவுள்ளது.

பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் சுமார் ரூ.450 கோடியில் இந்த மைதானம் அமையவுள்ளது. அதுவும், சிவனின் உருவத்தை அடிப்படையாக கொண்டு 30 ஏக்கரில் மைதானம் உருவாக்கப்படவுள்ளது.மேலும் திரிசூலம் வடிவிலான விளக்கு கோபுரங்கள், உடுக்கை வடிவிலான மையப் பகுதிகளும், பிறை நிலா வடிவிலான மேற்கூரைகளும் அமைய உள்ளதாக மாதிரி படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. வாரணாசி மைதானம் சுமார் 30,000 பேர் அமர்ந்து பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட உள்ளது. புதிய அக்கட்டப்படவுள்ள மைதானத்தில் டிஸ்ப்ளே ஸ்கோர்போர்டு, ஃப்ளட் லைட்கள், கார்ப்பரேட் பாக்ஸ்கள், பயிற்சிப் பகுதிகள், விஐபி ஓய்வறைகள், செய்தியாளர் சந்திப்பு மண்டலம் மற்றும் அலுவலகப் பகுதிகள் என்று அனைத்து வசதிகளுடன் கூடியதாக இந்த மைதானம் கட்டப்படவுள்ளது.

உத்தரபிரதேச கிரிக்கெட் சங்க இயக்குநர் யுத்வீர் சிங் கூறுகையில், இந்த மைதானத்தில் வரும் 2025ம் ஆண்டு முதல் காசி மக்கள் கிரிக்கெட் போட்டிகளை பார்க்கலாம் என்று கூறியிருந்தார். 2.5 ஆண்டுகளில் இந்த கிரிக்கெட் மைதானம் கட்டப்படுவதால், வாரணாசி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியும் என்றும் 121 கோடி மதிப்பிலான மைதானத்தின் நிலம் உத்தரபிரதேச அரசால் ஏற்கனவே வாங்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

எனவே,  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உத்தரப்பிரதேச கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றின் பங்கேற்புடன் இந்த அடிக்கல் நாட்டு விழா வரும் 23ம் தேதி நாளை மறுநாள் தொடங்க உள்ளது. இவ்விழாவில் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. மேலும், வாரணாசி தொகுதியில் ரூ.1,115 கோடியில் கட்டப்பட்ட 16 பள்ளிகளையும் பிரதமர் திறந்து வைக்க உள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இங்க நான் தான் கிங்.! எலான் மஸ்க் முதலிடம்! டாப் 5 உலக பணக்காரர் லிஸ்ட் இதோ..

ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…

29 minutes ago

”சேட்டன் வந்நல்லே… சேட்டை செய்ய வந்நல்லே” மீண்டும் கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன்.!

பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…

1 hour ago

“வக்பு சொத்துகளை மத்திய அரசு அபகரிக்க நினைக்கிறது!” ஆ.ராசா கடும் தாக்கு!

டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…

2 hours ago

வக்பு வாரிய திருத்த சட்டம் : பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

2 hours ago

“டெல்லி நாடாளுமன்றமே வக்பு சொத்தா மாறியிருக்கும்” மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

2 hours ago

மும்பை அணியிலிருந்து விலகும் ஜெய்ஸ்வால்.! கோவா அணியில் கேப்டன் பதவி?

மும்பை: உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட, மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC சான்றிதழ் கேட்டிருக்கிறார்…

3 hours ago