500 கோடி மதிப்புள்ள போதை மருந்துகள் ரெய்டில் சிக்கியது.! முதலமைச்சர் பெருமிதம்.!

Default Image

மணிப்பூர் மாநில எல்லையில் 500 கோடி மதிப்புள்ள போதை மருந்துகள் பிடிபட்டன. அசாம் ரீஃபிள்ஸ் எனும் சிறப்பு ராணுவ பிரிவு மற்றும் மணிப்பூர் காவல்துறையினர் இந்த ரெய்டை நடத்தியுள்ளனர்.

மணிப்பூர், 43 அசாம் ரீஃபிள்ஸ் மணிப்பூர் எல்லை நகரான மோரே டெங்நோபால் மாவட்டம் முதலமைச்சர் பிரேங் சிங்

இன்று (செவ்வாய் கிழமை) மணிப்பூர் மாநிலம் டெங்நோபால் மாவட்டத்தில், மாநில எல்லை நகரான மோரே எனும் ஊரில் 500 கோடி மதிப்புள்ள போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து அம்மாநில முதல்வர் பிரேங் சிங் தெரிவித்துள்ளார்.

சிறப்பு ராணுவ பிரிவான அசாம் ரீஃபிள்ஸ் எனும் குழுவில் இருந்து 43 வீரர்கள் மற்றும் மணிப்பூர் மாநில காவல்துறையினர் இணைந்து இந்த ரெயிடை நடத்தியுள்ளனராம்.

இதில், போதை மருந்துகள், சோப் மற்றும் சில சிறு பெட்டிகள் மூலம் கடத்தப்பட்டதை அதிகாரிகள் துல்லியமாக கண்டறிந்து அத்தனையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாம்.

ரெய்டில் பறிமுதல் செய்யப்பட்ட போதை மருந்துகளின் மதிப்பு சுமார் 500 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இது மணிப்பூர் எல்லையில் பிடிபட்ட அதிகபட்ச போதை பொருள்களில் ஒன்று. இந்த தகவலை மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேங் சிங் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் கடத்தலில் ஈடுபட்டதாக பிடிபட்டவனை போலீசார் மற்றும் சிறப்பு ராணுவத்தினர் விசாரித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்